தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகம் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் பெட்ரோல்குண்டு வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் 17 இடங்களில், 74வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிகாலை பைக்கில் வந்த மர்ம நபர்கள் ஸ்டெர்லைட் ஆலையின் கேட்டினை நோக்கி குண்டினை வீசியுள்ளனர்.