பந்தலூர் அருகே பழுதடைந்த பாலத்தை சீரமைக்க கோரிக்கை

 

பந்தலூர், ஜூலை 8: பந்தலூர் அருகே அத்திக்குன்னா பகுதியில் பழுதடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டார பகுதியில் கடந்த வாரம் பெய்த கன மழைக்கு பந்தலூர் அருகே உள்ள அத்திக்குன்னா பகுதியில் மழை வெள்ளத்தினால பாலம் சேதம் ஏற்பட்டது.

மேலும், பாலத்தின் அடிபாகத்தில் தடுப்புச்சுவர் இடிந்து பாலம் சேதம் அடைந்துள்ளது. தொடர்மழை பெய்தால் பாலம் முழுதும் சேதம் ஏற்படும் நிலை உள்ளது. பசுந்தேயிலை ஏற்றி வரும் லாரிகள் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இந்த பாலத்தின் வழியாக சென்று வருகிறது. எனவே, பாலம் முற்றிலும் சேதம் ஏற்பட்டால் போக்குவரத்து பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, கனமழைக்கு பழுதான பாலத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பந்தலூர் அருகே பழுதடைந்த பாலத்தை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: