சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கிராமப்புற ஏடிஎம் மையங்கள் செயல்படாமல் முடக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் ரூ.500, ரூ.ஆயிரம் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் இருந்து வங்கி ஏடிஎம் மையங்களின் செயல்பாடுகள் தொடர்ந்து முடக்கப்பட்டு ஏடிஎம் மையங்கள் வாரத்தில் பல நாட்கள் இயங்காத நிலையை ஏற்படுத்தியுள்ளனர். இதில் கிராமப்புறங்களில் உள்ள ஏடிஎம் மையங்களே அதிகமாக முடக்கப்பட்டு வருகிறது. நெட்வொர்க் பிரச்சினை வந்தால் அதை சரி செய்ய பல நாட்கள் எடுத்துக்கொள்கின்றனர். பணம் இல்லாதது, மெஷினில் ஏற்படும் சிறிய பிரச்சினைகளைக்கூட பல நாட்கள் சரி செய்யாமல் இருப்பது என கிராமப்புற ஏடிஎம்களை கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதுபோல் வேலை நாளான வெள்ளிக்கிழமைக்கு பிறகு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெஷின்களில் பணம் வைக்காமல் இருப்பது தொடர்ந்து வருகிறது. இதனால் மீண்டும் திங்கள்கிழமை பகல் 12 மணிக்கு மேல் தான் மீண்டும் ஏடிஎம் மைங்கள் இயங்குகின்றன. சனி, ஞாயிறன்று மையங்கள் பெயரளவிற்கு திறந்திருந்தாலும் பணம் இருப்பதில்லை. நூறு நாள் வேலை திட்டம், முதியோர் பென்சன் மற்றும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்ட அதிகப்படியானோர் கணக்கு வைத்திருக்கும் அரசு வங்கி ஏடிஎம்களில் தொடர்ந்து பணம் இல்லாத நிலையே ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் பல்வேறு தனியார் வங்கி ஏடிஎம்களிலும் இதே நிலையே காணப்படுகிறது. கிராமப்புற ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க முடியாத நிலையால் பல்வேறு தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வாடிக்கையாளர்கள் கூறியதாவது: எல்லாம் டிஜிட்டல் மயம், ஆன்லைன் மூலமே அனைத்தும் செய்யலாம் எனக்கூறிய நிலையில் ஏடிஎம் தொடர்ந்து செயல்படுவதே கேள்விக்குறியாகியுள்ளது. ஏடிஎம்களில் குறைந்த அளவில் பணம் வைக்க ஆரம்பித்ததில் இருந்து இப்பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. ஏடிஎம்களை பராமரிக்க போதிய நடவடிக்கை இல்லை. வங்கிகளில் கேட்டால் எங்களுக்கும், ஏடிஎம்மிற்கும் சம்பந்தம் இல்லை என்கின்றனர். ஏடிஎம்களை முன்புபோல் அனைத்து நாட்களிலும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்….
The post பணம் இருப்பதே இல்லை கிராமப்புற ஏடிஎம் மையங்கள் முடக்கம்-வாடிக்கையாளர்கள் அவதி appeared first on Dinakaran.