சேலம்-சென்னை 8 வழிச்சாலை அவசரமாக உருவாக்கப்பட்ட திட்டம்: டிடிவி.தினகரன்

திருவண்ணாமலை: சேலம்-சென்னை 8 வழிச்சாலை அவசரமாக உருவாக்கப்பட்ட திட்டம் என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக அரசு கேட்ட மறுநாளே 8 வழிச்சாலைக்கு மத்திய அரசு அனுமதியளித்ததாக கூறியுள்ளார். 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளை முதல்வர் சந்தித்து விளக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும், காவல்துறை மூலம் விவசாயிகளை மிரட்டுவது சரியல்ல என அவர் கூறியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: