தேசிய நெடுஞ்சாலையில் 2 குதிரைகள் பலி

ஈரோடு, செப். 17: சித்தோடு அடுத்துள்ள ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி முன்பாக தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 2 குதிரைகள் இறந்த நிலையில் காணப்பட்டது. மேய்ச்சலுக்கு விடப்பட்ட குதிரைகள் சாலையை கடக்கும் போது வாகனம் மோதி இறந்ததா அல்லது வேறு எங்கேயாவது இறந்த குதிரைகளை கொண்டு வந்து சாலையோரம் வீசிச்சென்றார்களா என்பது தெரியவில்லை. இறந்த குதிரைகளின் உரிமையாளர் யார்,எப்படி இறந்தது என்பது குறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தேசிய நெடுஞ்சாலையில் 2 குதிரைகள் பலி appeared first on Dinakaran.

Related Stories: