திண்டுக்கல்லில் மஞ்சப்பை விழிப்புணர்வு ஊர்வலம்

திண்டுக்கல், செப். 2: திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மற்றும் விமானப்படை மாணவர்கள் சார்பில் மஞ்சப்பை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ் தேசிய மாணவர் படை அலுவலர் நிக்கோலஸ் முன்னிலையில், மேற்கு ரோட்டரி சங்க செயலாளர் ரங்கையா துவக்கி வைத்தார். நெகிழியை ஒழிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் வலியுறுத்தும் விதமாக மீண்டும் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் துவங்கி மெயின் பஜார், கோட்டைக்குளம் ரோடு, காந்தி மார்க்கெட் வழியாக மீண்டும் பள்ளியின் நிறைவடைந்தது. மாணவர்கள் பொதுமக்களே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெகிழிப் பையை வாங்கி விட்டு மஞ்சப் பையை அனைவருக்கும் வழங்கினர். மேலும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் மஞ்சள் பையை பயன்படுத்துவோம் என கோஷங்கள் முழங்கி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் மஞ்சப்பை விழிப்புணர்வு ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: