தர்மபுரி ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு

 

தர்மபுரி, மே 4: அக்னி நட்சத்திரம் துவக்கத்தை முன்னிட்டு, நேற்று தர்மபுரி ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக, வெயிலின் தாக்கம் அதிகமாகி கொண்டே இருந்தது. தினமும் 100 டிகிரி மேல் வெயில் நிலவியது. இந்நிலையில், இன்று (4ம்தேதி) முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. இதையடுத்து, வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுவிக்க, தர்மபுரி எஸ்.வி.ரோடு ஆஞ்சநேயர் கோயிலில், அபய ஆஞ்சநேயருக்கு நேற்று வெண்ணெய் காப்பு அலங்காரம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த அக்னி நட்சத்திர காலம் முழுவதுமாக தினசரி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

The post தர்மபுரி ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு appeared first on Dinakaran.

Related Stories: