சித்திரை திருவிழாவையொட்டி வைகை அணையில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை: மதுரை சித்திரை திருவிழாவையொட்டி வைகை அணையில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நாளை முதல் 30-ம் தேதி வினாடிக்கு 216 கனஅடி நீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 18-ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது.

ஏப்ரல் 27-ம் தேதி திருக்கல்யாணமும், 29-ம் தேதி மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது. இந்நிலையில் அழகர் ஆற்றில் இறங்குவதை முன்னிட்டு நாளை முதல் வைகை ஆற்றில் நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: