தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 972 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை அறிக்கை..!

சென்னை: தமிழகத்தில் மேலும் 972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 25,911 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 972 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 35,53, 670 ஆக அதிகரித்துள்ளது.இன்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 1,453 பேர் குணமடைந்த வீடு திரும்பிய நிலையில் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 35,06,229 ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,033 ஆக உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 972 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு 84, சேலம் 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 9, 408 தொற்றுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்…

The post தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 972 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை அறிக்கை..! appeared first on Dinakaran.

Related Stories: