சந்தூரில் பல்நோக்கு கட்டிடம் கட்ட பூமி பூஜை

 

போச்சம்பள்ளி: பர்கூர் சட்டமன்ற தொகுதி, பெருகோபனப்பள்ளி கிராமத்தில், மாநிலங்களவை உறுப்பினர் நிதி ரூ.9 லட்சம் மதிப்பில், நாடக மேடை மற்றும் சந்தூர் கிராமத்தில் ரூ.7 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. இதில் தம்பிதுரை எம்பி கலந்துகொண்டு, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபால், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் தூயமணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், இளைஞரணி மாவட்ட செயலாளர் மாதையன், சக்கரவர்த்தி, குமார், சதாசிவம், வெள்ளையன், செட்டிகுமார், வைரவன், சீனிவாசன், மாதையன், ராதாகிருஷ்ணன், நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post சந்தூரில் பல்நோக்கு கட்டிடம் கட்ட பூமி பூஜை appeared first on Dinakaran.

Related Stories: