கூட்டுறவு நிறுவனங்களில்உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு

கரூர், டிச.25: கரூர் மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையம் மூலமாக கரூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களின் உதவியாளர் காலி பணியிடங்களுக்கு நடைபெற்று வரும் எழுத்துத் தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டார்.கரூர் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரியில், மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையம் மூலம் கூட்டுறவு நிறுவனங்களின் 37 உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த மையத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை எழுத 584 பேர் தகுதியான நிலையில் நேற்று நடைபெற்ற எழுத்துத் தேர்வினை 489 பேர் கலந்து கொண்டு எழுதினர். 95 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த நிகழ்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, துணைப்பதிவாளர் (தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்) பிச்சைவேலு உள்பட அனைத்து அதிகாரிகளும் உடனிருந்தனர்.

The post கூட்டுறவு நிறுவனங்களில்உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: