சென்னை குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..விவசாயிகள் மகிழ்ச்சி..!! Jun 03, 2021 மேட்டூர் அணை முதல் அமைச்சர் எம். ஸ்டால் சென்னை தமிழ்நாடு அரசு குறுவை சென்னை: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 12ம் தேதி நீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை வரும் 12ம் தேதி திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நேற்றைய தினம் விவசாயிகள் கோரிக்கை விடுந்த்திருந்தனர். தஞ்சையில் ஆறுகள், குளங்கள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் பிரதீப் யாதவ் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட விவசாயிகள், தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். வருகின்ற 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேட்டூர் அணை திறக்கப்படுவதன் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கடைமடை வரை செல்லும் வகையில் கால்வாய்களை தூர்வார ரூ.65 கோடியில் பணி நடக்கிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.13 அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் தற்போது 61.43 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. அணை திறப்பின் மூலம் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் பயன் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. … The post குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..விவசாயிகள் மகிழ்ச்சி..!! appeared first on Dinakaran.
பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்: வாகன ஓட்டிகள் அவதி பாலம் அமைத்து தர கோரிக்கை
அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு
தமிழ்நாடு யாதவ மகாசபை செயற்குழுவில் யாதவ மாணவர்களுக்கு யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி அளிக்க ரூ.10 லட்சம் நிதியுதவி: மாநில தலைவர் நாசே ராமச்சந்திரன் வழங்கினார்
2ம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வசதிகள் இருக்கும்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்
சென்னையில் குடிநீர் விநியோக அளவு மற்றும் தரத்தை மேம்படுத்த நாளை முதல் கணக்கெடுப்பு பணி: குடிநீர் வாரியம் தகவல்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து முன்னாள் உதவி பேராசிரியர் மனு: கலாஷேத்ரா அறக்கட்டளை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் கழிவுநீரகற்றல் சட்டத்தில் திருத்தம்: பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல்
பிள்ளைகள் வளந்துவிட்டார்கள் என தொடர்பை துண்டித்ததால் பெண்ணை தீவைத்து கொளுத்திய கள்ளக்காதலன்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை, காதலன், மருமகனுக்கும் தீக்காயம்
சாலையில் திரியும் மாடுகளால் விபத்து, காயம் ஏற்பட்டால் உரிமையாளர் மீது வழக்கு: ஆலோசனை கூட்டத்தில் முடிவு