கிச்சடி சாதம்

செய்முறை:;முதலில் பல்லாரி, தக்காளி மற்றும் காய்கறிகளை
நறுக்கவும். அரிசி, பருப்பை கழுவி ஊற விடவும். தேங்காயுடன் கசகசாவை
சேர்த்து மைய அரைக்கவும். அடிக்கனமான பாத்திரத்தில் வாசனை பொருட்களை போட்டு
பொரிய விட்டு பின்பு பல்லாரியை போடவும். வெங்காயம் பொன்முறுவலானதும்
இஞ்சி, பூண்டு விழுதை போட்டு நன்கு வதக்கவும். பிறகு அதில் மசாலா பொடிகளை
போட்டு வதக்கவும். பச்சை வாசனை நீங்கியதும், தக்காளியை போட்டு குழைய
விடவும். பிறகு காய்கறிகள், புதினா கொத்தமல்லியை போட்டு, அரைத்து வைத்துள்ள
தேங்காய் கலவையை ஊற்றி நன்கு கலக்கவும். பிறகு அதில் அரிசி கலவையை கொட்டி
லேசாக கிளறவும். இதில் நீரை சேர்த்து நன்கு கலக்கவும். 5 கப் நீர்
போதுமானது. எல்லாம் சேர்ந்து நன்கு கொதிக்கும் போது மூடியை போட்டு, அடுப்பை
மிதமான தீயில் வைக்கவும். அரிசி முழுவதுமாக வெந்தவுடன் தயிரைச் சேர்த்து
கிளறி சூடாக பரிமாறவும். சுவையான கிச்சடி சாதம் ரெடி.

The post கிச்சடி சாதம் appeared first on Dinakaran.

Related Stories: