கல்லூரி மாணவியை ஏமாற்றிய வாலிபர்

 

கிருஷ்ணகிரி, நவ.5: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், திருச்சியில் உள்ள கல்லூரியில், பிஎஸ்சி அக்ரிகல்சர் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் ஊத்தங்கரை வேப்பாளம்பட்டியைச் சேர்ந்த பில்டிங் கான்ட்ராக்டரான பாண்டிதுரை(32) என்பருக்கும், பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதனிடையே, பாண்டிதுரை மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பாண்டிதுரையிடம் கேட்டபோது, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததோடு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி நேற்று முன்தினம், ஊத்தங்கரை போலீசில் மாணவி புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பாண்டிதுரையை தேடி வருகின்றனர்.

The post கல்லூரி மாணவியை ஏமாற்றிய வாலிபர் appeared first on Dinakaran.

Related Stories: