கலெக்டர் அழைப்பு மக்கள் குறைதீர் கூட்டம் 348 மனுக்கள் குவிந்தன

அரியலூர், ஜூன் 6: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நேற்று நடைபெற்றது.இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 348 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெற் மாவட்ட கலெக்டர் மூலம் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) குமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கலெக்டர் அழைப்பு மக்கள் குறைதீர் கூட்டம் 348 மனுக்கள் குவிந்தன appeared first on Dinakaran.

Related Stories: