கம்யூனிஸ்ட் கட்சி கிளை கருத்தரங்கு

 

திருப்புவனம், செப். 11: திருப்புவனம் பழையூரில் மார்க்சிஸ்ட் கட்சி கிளை கருத்தரங்கு நடந்தது. இக்கருத்தரங்கில் கட்சி ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி, சவுந்தர பாண்டியன், நகர செயலாளர் ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இரண்டாக பிரிக்கப்பட்ட திருப்புவனம் கிளைக்கு முத்துராஜா , மாரிமுத்து ஆகியோர் செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, பழையூரில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தவும், விவசாயத்தை பாதிக்கக்கூடிய காட்டுப்பன்றிகளை அகற்ற வேண்டும், பழையூர் ஊரணியை பாதுகாத்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post கம்யூனிஸ்ட் கட்சி கிளை கருத்தரங்கு appeared first on Dinakaran.

Related Stories: