தஞ்சாவூர் ஆர்ஓ அலுவலகத்தில் நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

 

தஞ்சாவூர், செப். 20: தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது.தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (20ம் தேதி) காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.எனவே தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர் வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.இவ்வாறு அவர் அதில் ெதரிவித்துள்ளார்.

The post தஞ்சாவூர் ஆர்ஓ அலுவலகத்தில் நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: