கடனை கட்டச்சொன்னதால் தகராறு: வாலிபரை தாக்கியவர் கைது

 

ஜெயங்கொண்டம், ஏப்.5: அரியலூர் மாவட்டம் கா.அம்பாபூர் தெற்குத்தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் சங்கர் (31).அதே ஊரைச் சேர்ந்த சதாசிவம் (33), மனைவி சுகன்யா (26). இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடியிருந்து வரும் வீட்டின் மீது கடன் வாங்கி கொள்ள சங்கர் கையெழுத்து போட்டுள்ளார். சதாசிவம் கடனை கட்டாததால் சங்கர் கடனை கட்ட அறிவுறுத்தியுள்ளார்.
இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சதாசிவம் தாக்கியதில் சங்கர் காயமடைந்தார். இதுகுறித்து கயர்லாபாத் போலீசார் வழக்கு பதிந்து சதாசிவத்தை கைது செய்து விசாரணை மேற்கொ ண்டு வருகின்றனர்.

The post கடனை கட்டச்சொன்னதால் தகராறு: வாலிபரை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: