ஊர்நாட்டாண்மை கொலை வழக்கில் கைதான 2 போ் மீது குண்டாஸ்

 

தஞ்சாவூர், ஏப்.26:கும்பகோணம் அருகே ஊர் நாட்டாண்மை கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பழவத்தான்கட்டளையை சேர்ந்தவர் சைமன்ராஜ். ஊர் நாட்டாண்மையான இவர் கடந்த பிப்ரவரி மாதம் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் படுகாயத்துடன் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அங்கு சிகிச்சை பலனின்றி சைமன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பான வழக்கில் பழவத்தான்கட்டளை முல்லைநகரை சேர்ந்த ஆகாஷ் (21), பிரேம்குமார் (22) ஆகியோரை நாச்சியார்கோவில் காவல் ஆய்வாளர் ரேகாராணி கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.இந்த நிலையில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆய்வாளர் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் படி, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் ஆகாஷ், பிரேம்குமார் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post ஊர்நாட்டாண்மை கொலை வழக்கில் கைதான 2 போ் மீது குண்டாஸ் appeared first on Dinakaran.

Related Stories: