ஈரோடு மாவட்டத்தில் சிறுமியை கடத்தி திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு

ஈரோடு, ஆக.1: ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஆலாம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன் மகன் ராஜ்குமார் (21). தொழிலாளி. இவர், பவானியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து, குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதுகுறித்து சைல்டு லைன் அமைப்பினர் பவானி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின்பேரில், போலீசார் ராஜ்குமார் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஈரோடு மாவட்டத்தில் சிறுமியை கடத்தி திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: