இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை மாவட்ட அமைப்பாளர் வழங்கினார்

திருப்பூர், அக்.22: திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி 15 வேலம்பாளையம், பாண்டியன் நகர், கொங்கு நகர், அண்ணா காலனி ஆகிய பகுதி கழகங்களுக்கு இளைஞர் அணி உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  இதற்கு பகுதி கழக செயலாளர்கள் கொ.ராமதாஸ்,ஜோதி,போலார் சம்பத் குமார், மின்னல் நாகராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார்.பகுதி இளைஞரணி அமைப்பாளர்கள் ராம்குமார்,ராஜ்குமார்,சிவகுமார்,அசோக் குமார் ஆகியோர் ஏற்பாட்டில் வேலம்பாளையம்,பாண்டியன் நகர்,கொங்கு நகர்,அண்ணா காலணி உள்ளிட்ட பகுதி கழக அலுவலகங்களில் உறுப்பினர் அட்டை உரிய பொறுப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஈ.தங்கராஜ் கலந்து கொண்டு உறுப்பினர் அட்டைகளை உரிய பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தார். இதில் திருப்பூர் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் எம்.எஸ் மணி, மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியம், முன்னாள் மாநகர நிர்வாகி கேபிள் ராஜ், 4வது வார்டு செயலாளர் சுரேஷ், 26வது வார்டு செயலாளர் வெங்கடேஷ், திருப்பூர் வடக்கு மாநகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வஞ்சிமுத்து, பாண்டித்துரை, பார்த்திபன், தியாகு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை மாவட்ட அமைப்பாளர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: