விதிமுறைகளை மீறிய 12 கடைகளுக்கு ரூ.17 ஆயிரம் அபராதம் விதிப்பு

 

திருப்பூர், அக். 16: திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் கொங்கு மெயின் ரோட்டில் அமைந்துள்ள உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஸ்டாலின் பிரபு, ஆறுச்சாமி, பாலமுருகன், ரகுநாதன், கோடிஸ்வரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் 45 கடைகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது, 5 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், காலாவதியான சிக்கன், கலப்படம் செய்யப்பட்ட தேயிலை தூள், உணவு பாதுகாப்பு பொட்டல விதிகளை பின்பற்றாத உணவுப்பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. ஆய்வின் போது உணவு பாதுகாப்பு மற்றும் தர உரிமம் சட்டத்தை மீறிய 12 கடைகளுக்கு அபராதமாக ரூ.17 ஆயிரம் விதிக்கப்பட்டது.

The post விதிமுறைகளை மீறிய 12 கடைகளுக்கு ரூ.17 ஆயிரம் அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: