மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் தபால் அலுவலகம்

 

திருப்பூர், அக்.15: இந்தியா முழுவதும் சர்வதேச தபால்வாரம் கடந்த 9ம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. தபால் வாரத்தை முன்னிட்டு தபால் நிலையங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே கடிதம் எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்துவது, தபால் அலுவலகங்களில் உள்ள சேவைகள்,ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சிறுசேமிப்பு திட்டம்,முதியவர்களுக்கான சேமிப்பு திட்டங்கள்,தபால் வங்கி சேவை ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தபால் வார விழா கொண்டாடப்பட்டு வருவதை முன்னிட்டு திருப்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள தலைமை தபால் அலுவலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

The post மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் தபால் அலுவலகம் appeared first on Dinakaran.

Related Stories: