சென்னை: உயர் நீதிமன்றம் உத்தரவு எதிரொலியாக 302 மனுக்களை கேட்டு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலிலதா கடந்த 2016ம் டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியதால், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் 302 புகார்கள் அளிக்கப்பட்டன. இதற்கிடையில், விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதால், ேதனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்த 302 புகார்களும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், 4 வருடங்களுக்கு மேலாகியும் விசாரணைக்கு அழைக்கபடாததால் புகார் அளித்த நபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.