ஆவடி மாநகராட்சியில் பாஜ -32, அதிமுக-20 வார்டுகளில் டெபாசிட் இழப்பு

ஆவடி: ஆவடி மாநகராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜ 32 வார்டுகளிலும், அதிமுக 20 வார்டுகளிலும் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது. ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இங்கு நடந்த நகர்ப்புற தேர்தலில் திமுக 35 வார்டுகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக தலா 3 வார்டுகளிலும், விடுதலை சிறுத்தை, சிபிஎம் தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன. மேலும், அதிமுக 4 வார்டுகளிலும், சுயேச்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இந்த தேர்தலில் அதிமுக 20 வார்டுகளில் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சி, 45 வார்டுகளிலும், பா.ஜ 32 வார்டுகளிலும், பாமக 29 வார்டுகளிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 25 வார்டுகளிலும், மக்கள் நீதி மையம் 13 வார்டுகளிலும், தேமுதிக 11 வார்டுகளிலும், பி.எஸ்.பி 5 வார்டுகளில் டெபாசிட்டை இழந்துள்ளன. இச்சம்பவம் இரு கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. …

The post ஆவடி மாநகராட்சியில் பாஜ -32, அதிமுக-20 வார்டுகளில் டெபாசிட் இழப்பு appeared first on Dinakaran.

Related Stories: