ஐஎன்டியுசியை நிர்வகிக்கும் குழுவுக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கத்தை நிர்வகிக்க தற்காலிக குழுவை நியமித்த தேசிய தலைவர் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தற்போதைய நிர்வாகக் குழுவை கலைத்த பிறகே தற்காலிக குழுவை நியமிக்க முடியும் என நீதிபதி டீக்காராமன் தெரிவித்த நிலையில், மனுவுக்கு பதிலளிக்க ஐ.என்.டி.யு.சி. மத்திய குழு. தற்காலிக குழு தலைவர் ஜெகநாதன் உள்ளிட்டோருக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர்.18ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

The post ஐஎன்டியுசியை நிர்வகிக்கும் குழுவுக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: