ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

ஆண்டிபட்டி, செப். 9: ஆண்டிபட்டி நகரில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் அருகே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். முருகேசன் வரவேற்றார். இதில் பள்ளிகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை பி.எட். பயிற்சி மாணவர்களை கொண்டு ஆய்வு செய்து அவமதிப்பதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் சரவணமுத்து, மாவட்ட பொருளாளர் விஜயராஜ், மாவட்ட துணைத் தலைவர் திருப்பதி, வட்டார தலைவர் லதா மகேஸ்வரி, பொருளாளர் ஆதிமூலம் ஆகியோர் கோரிக்கை உரையாற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: