அலங்காநல்லூர் அருகே பட்டாளம்மன் கோயில் பங்குனி திருவிழா

அலங்காநல்லூர், ஏப். 5: அலங்காநல்லூர் அருகே காந்திகிராமத்தில் அமைந்துள்ள பட்டாளம்மன், முத்துக்கன்னி, கருப்பசாமி, திருக்கோயிலின் 60ம்ஆண்டு பங்குனி உற்சவ விழா நடைபெற்றது. இத்திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 20ம் தேதி மேள தாளங்கள் முழங்க சுவாமியை அழைத்து வருதல், முளைப்பாரி எடுத்தல், அம்மனுக்கு கண் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், வீதியுலா வருதல் உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டன.

பின்னர் திரளான பக்தர்கள் நேர்த்திக்கடனாக மாவிளக்கு வைத்தல், அக்னிச்சட்டி எடுத்தல் உள்ளிட்டவற்றை செலுத்தினர். இதன் தொடர்ச்சியாக பக்தர்கள் நேற்று பொங்கல் வைத்து கிடா வெட்டி படையல் வைத்தனர். பின்னர் மஞ்சள் நீராடுதலுடன், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி அம்மன்கள் முளைப்பாரி அலங்காரத்தில் எழுந்தருளினர். இறுதியில் முளைப்பாரிகள் கண்மாயில் கரைக்கப்பட்டதுடன், திருவிழா நிறைவு பெற்றது. இதில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post அலங்காநல்லூர் அருகே பட்டாளம்மன் கோயில் பங்குனி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: