வங்கதேசத்தில் 81 அடி உயர ராமர் சிலையை அமைத்த இந்து நபர் கைது: டாக்காவில் போராட்டம் வெடித்தது

டாக்கா: வங்கதேசத்தில் 81 அடி உயர ராமர் சிலையை அமைத்த இந்து நபர் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து டாக்காவில் போராட்டம் வெடித்தது. வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி அகற்றப்பட்ட பிறகு இந்துக்களுக்கு எதிரான போராட்டங்கள், வன்முறைகள் அதிகரித்து வந்தன. அதன்பின் தேர்தல் வந்து புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவி ஏற்ற பிறகு வன்முறைகள் குறைந்து இயல்பு நிலை திரும்பின. இந்த நிலையில் கைபந்தா மாவட்டத்தில் ராமருக்கு 81 அடி உயர சிலை அமைத்து வந்த இந்து நபரை கைது செய்ததால் டாக்காவில் போராட்டம் வெடித்துள்ளது.

வங்காளதேசத்தின் கைபந்தா மாவட்டத்தில் 81 அடி உயர ராமர் சிலையை அமைக்கும் பணியைத் தடுப்பதற்காகவே, ஹரிதாஸ் சந்திர தரணி தாஸ் என்ற இளம் இந்து நபர் மீது பணமோசடிப் புகார்கள் போலியாகச் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டி, அந்நாட்டின் சிறுபான்மையினத் தலைவர்கள் டாக்காவில் உள்ள தேசிய பத்திரிகையாளர் மன்றத்திற்கு வெளியே பெரும் போராட்டம் நடத்தினர்.

வங்காளதேச இந்து-பௌத்த-கிறிஸ்தவ ஐக்கிய கவுன்சிலால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டத்தில், இந்து, பௌத்த மற்றும் கிறிஸ்தவ சமூகங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து பங்கேற்றனர். அவர்கள், அதிகாரிகள் மதச் சிறுபான்மையினரை குறிவைப்பதாகக் குற்றம் சாட்டியதுடன், தாஸை உடனடியாக விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தினர்.

ஏன் கைது?
ரூ.7 கோடி மதிப்பிலான சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான பணமோசடி குற்றச்சாட்டுகளின் பேரில், வங்காளதேசத்தின் குற்றப் புலனாய்வுத் துறை இந்து நபர் ஹரிதாஸ் என்பவரைக் கைது செய்தது. அவர் 2010ல் சட்டவிரோதமாக இந்தியாவுக்குச் சென்றதாகவும், பின்னர் 2019ல் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: