ரூ.30 ஆயிரம் கோடி மோசடி; அனில் அம்பானி வழக்கில் 15 இடங்களில் ரெய்டு: சிபிஐ அதிரடி

புதுடெல்லி: அனில் அம்பானி நிறுவனங்களால் ஏற்பட்ட ரூ.30 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் டெல்லி, மும்பையில் மொத்தம் 15 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானி தொடர்புடைய ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் வங்கிகள் மற்றும் எல்ஐசியில் பெற்ற கடன்கள் மூலம் மொத்தம் ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து 38 இடங்களில் இதுவரை சோதனை நடத்தி உள்ளது. மேலும் 7 பேரை கைது செய்துள்ள சிபிஐ 4 குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் நேற்று டெல்லி, மும்பையில் மேலும் 15 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஏடிஏ குழுமத்துடன் தொடர்புடைய, 23 நிறுவனங்கள் இந்தச் சோதனையின் வரம்பிற்குள் வந்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: