பெரம்பலூர், ஜூலை 9: பெரம்பலூர் மாவட்ட நீர்வளத் துறையில் 2026-27ஆம் ஆண்டிற்கான புதிய முன் மொழிவுகள் குறித்து அமைச்சர் ஆனந்த் விரிவாக ஆய்வுசெய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில், நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த், பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் பல்வேறு பணிகள் மற்றும் திட்டங்களின் செயல்பாடுகள், முன்னேற்றம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
