தா.பழூர், ஜூலை 10: குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற கடைசி முயற்சியாக, ஜெயங்கொண்டம் அருகே மும்முனை மின்சாரம் தட்டுப்பாட்டால் வாடகைக்கு விவசாயி வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குழவடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் விவசாயி. இவர் தற்போது மூன்று ஏக்கர் பரப்பளவில் குழவடையான் சித்தேரி அருகில் மோட்டார் பாசனம் மூலம் குறுவை நெற்பயிர்களை பயிரிட்டுள்ளார். இது போன்று 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர்.
