விபத்து வழக்கில் மிரட்டும் தொனியில் பேசும் எஸ்ஐ

 

வேலூர், ஜூன் 18: குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் விபத்து தொடர்பான வழக்கில் மிரட்டும் தொனியில் பேசுவதாக பெண் எஸ்எஸ்ஐ மீது வேலூர் எஸ்பி அலுவலகத்தில் ஓய்வு பெற்ற நீதிமன்ற ஊழியர் புகார் அளித்தார்.வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்த வாராந்திர குறைதீர்வு கூட்டத்தில் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ஒருவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். எனது மகன் கடந்த ஏப்ரல் மாதம் பைக்கில் சென்றபோது, எதிர் திசையில் வந்த பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் எனது மகனின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories:

தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்: ஆர்டிஓ பங்கேற்பு வேலூர், ஜூன் 22: வேலூர் கோட்டை பூங்காவில் தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் ஆர்டிஓ பங்கேற்றார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் நேற்று யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் ஆர்டிஓ செந்தில் குமார் தலைமை தாங்கினார். சென்னை தொல்லியல் துறை துணை பொறியாளர் பரணிதரன், 10வது என்சிசி பட்டாலியன் சுபேதார் பிரசாத், பாரத் கல்வி குழும இயக்குநர் இந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.