தமிழக அரசு வெளியிட்டது ஒரு கருப்பு அறிக்கை காட்பாடியில் துரைமுருகன் பேட்டி

 

வேலூர், ஜூன் 18: தமிழ்நாட்டில் வன்முறை, கொலை, பாலியல் தொல்லை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டது ஒரு கருப்பு அறிக்கை என்று காட்பாடியில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். காட்பாடி பிரம்மபுரம்-ரங்காபுரம் இடையே பாலாற்றின் குறுக்கே ரூ.100 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் திமுக ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கியது. தற்போது பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதால் பாலத்தின் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் திமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட உயர்மட்ட பாலத்தை திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் நேற்று மாலை பார்வையிட்டார்.

Related Stories:

தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்: ஆர்டிஓ பங்கேற்பு வேலூர், ஜூன் 22: வேலூர் கோட்டை பூங்காவில் தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் ஆர்டிஓ பங்கேற்றார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் நேற்று யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் ஆர்டிஓ செந்தில் குமார் தலைமை தாங்கினார். சென்னை தொல்லியல் துறை துணை பொறியாளர் பரணிதரன், 10வது என்சிசி பட்டாலியன் சுபேதார் பிரசாத், பாரத் கல்வி குழும இயக்குநர் இந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.