மதுரை: மேலூர் அருகே கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். கச்சிராயன்பட்டி புதூர் பகுதியில் இயங்கிவரும் கல்குவாரியால் மக்களுக்கு பாதிப்பு என புகார் தெரிவிக்கின்றனர். கற்களை சாலையோரம் கொட்டி இடையூறு செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
