சென்னை: சென்னையில் ராயபுரத்தில் மறுமணம் செய்துகொள்வதாகக் கூறி பெண் காவலரை ரவுடி ஏமாற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் காவலர் புகாரின்பேரில் சிவராமன், அவரது குடும்பத்தினர் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் காவலரை மறுமணம் செய்வதாக கூறி ரவுடி சிவராமன் என்பவர் 97 சவரன், ரூ.42 லட்சம் பறித்ததாக புகார் அளித்துள்ளனர்.
