கன்னியாகுமரி: பெங்களூருவில் இருந்து குமரி வழியாக கேரளாவுக்கு கள்ள நோட்டு கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். களியக்காவிளை அருகே கேரள எல்லையில் காரில் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்தனர். கள்ள நோட்டைக் கடத்திச் சென்ற திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சஜி, அபி, அச்சமன் போற்றி ஆகியோர் கைது செய்தனர். ஒரு லட்சம் தந்தால் அதற்கு ஈடாக ரூ.10 லட்சம் கள்ள நோட்டுகளை தருவதாக மக்களை ஏமாற்ற திட்டமிட்டிருந்தது
