சென்னை: சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் 4வது பிளாட்பார்மில் கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசில் தலை இல்லாத நிலையில் 35 வயது மதிக்கதக்க ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் ரயில்வே எஸ்.பி. ஆய்வு செய்து வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக இருக்கும் பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலை இல்லாமல் சடலம் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டு சூட்கேசில் உடலை வைத்து சென்ற கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
