கோவையில் சிறுமி படுகொலை: குடும்பத்தினருக்கு ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் ஆறுதல்

 

சென்னை: இரண்டு நாட்களுக்கு முன்பு, கோவை மாவட்டம் சூலூரில் சமூக விரோதிகள் இருவரால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் சொந்த ஊரான, சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்துள்ள கொளத்தூரில் அவரது இல்லத்திற்கு, தமிழக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுடன் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் சென்று, குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதலை தெரிவித்தனர்.

இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது, விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தருவதில் பாஜ உறுதியோடு இருக்கும் என்று குழந்தையின் பெற்றோர்களிடம் அவர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வில், சேலம் மாவட்ட தலைவர் ஹரிராமன், சுற்றுச்சூழல் பிரிவு மாநில அமைப்பாளர் கோபிநாத் உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: