7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்

சென்னை: மத்தியபிரதேசத்தில் இருந்து மன்னார் வளைகுடா வரை வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் வரும் மே 9-ம் தேதி வரை பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

மத்திய பிரதேசத்தில் இருந்து தமிழ்நாடு வழியாக மன்னார் வளைகுடா வரை நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இன்று தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு மற்றும் நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கூடிய கனமழை பொழிய கூடும். அதே நேரம் மே 7-ஆம் தேதி அதாவது நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தவிர வரும் மே 8 மற்றும் 9 தேதிகளில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி. மேலும், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறி இருக்கிறது.

Related Stories: