சென்னை: சென்னை, கலைவாணர் அரங்கில் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு நாளை சிறப்பு வகுப்பு நடக்க இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாளை மறுதினம் ரிப்பன் மாளிகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் பயிற்சி நடைபெறுகிறது. தபால் வாக்குகள் மற்றும் படிவங்களைப் பராமரிப்பது குறித்து அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்படுகிறது.
