தமிழ்நாடு அரசின் நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமனம்..!!

சென்னை: தமிழக அரசின் நில நிர்வாக ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 1992ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், கடந்த பிப்ரவரியில், தமிழக அரசு பணியில் இருந்து, ஒன்றிய அரசு பணிக்கு மாற்றப்பட்டார். ஒன்றிய அரசின் பள்ளிக் கல்வி துறையின் கீழ் இயங்கும், நவோதயா வித்யாலயா சமிதியின் ஆணையராக பணியாற்றி வந்தார். இதையடுத்து அவர், அண்மையில், மீண்டும் தமிழக அரசு பணிக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், ராஜேஷ் லக்கானி நில நிர்வாக ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ராஜேஷ் லக்கானி, முன்னதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாகவும், மின் வாரிய தலைவராகவும் பணியாற்றியவர். தேனி, குமரி மாவட்ட கலெக்டராகவும் வீட்டு வசதித்துறை முதன்மை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: