அவசர அழைப்பின்பேரில் தமிழக ஆளுநர் இன்று திடீர் டெல்லி பயணம்

 

மீனம்பாக்கம்: டெல்லியில் இருந்து வந்த அவசர அழைப்பின்பேரில், சென்னையில் இருந்து இன்று மதியம் 2.30 மணியளவில் இன்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலமாக தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் புதுடெல்லிக்குப் புறப்பட்டு சென்றார். அவருடன் செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி சென்றனர். ஆளுநர் அர்லேகர் அங்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. அவர் டெல்லியிலிருந்து எப்போது சென்னை திரும்புவார் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Related Stories: