டெல்லி: நீட் மோசடியை தடுக்க ஒன்றிய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. நீட் மோசடி வழக்கில் ஒன்றிய அரசு இதுவரை பதில் மனு தாக்கல் செய்யாததால் உச்ச நீதிமன்றம் அதிருப்தி. நீட் மோசடி வழக்கில் ஒரு வாரத்தில் ஒன்றிய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு. ஆண்டுதோறும் விமானத்தில் கேள்வித்தாள் கொண்டு சென்று சேர்க்க முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
