தென் பெண்ணையாறு விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் ஆணை

 

டெல்லி: தென் பெண்ணையாறு விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு பதில் அளிக்க ஆணை. ஏற்கெனவே இருக்கக்கூடிய தீர்ப்பாயத்திற்கு தென்பெண்ணை விவகாரத்திற்கு மாற்றலாம் என்று ஒன்றிய அரசு வாதம். புதிய தீர்ப்பாயம் அமைப்பது தான் சிறந்ததாக இருக்கும் என தமிழ்நாடு அரசு வாதிட்டுள்ளது. தமிழ்நாடு – கர்நாடகா இடையே பெண்ணையாறு நீர் பங்கீட்டு விவகாரத்தை மகதாயி நதி நடுவர் மன்றத்திடம் ஒப்படைக்கக் கோரி ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த யோசனைக்கு தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: