இந்த மனு நேற்று திருச்சி கூடுதல் மகிளா கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்காக சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பெலிக்ஸ் வழக்குக்கு தேவையில்லாத ஆவணங்களை பறிமுதல் செய்ததால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதியிடம் முறையிட்டார். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயப்பிரதா ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தார். இதையடுத்து திருச்சி ராம்ஜிநகரில் உள்ள காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். தொடர் விசாரணைக்கு பின்னர் இன்று மாலை பெலிக்ஸ் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
The post திருச்சி காவல் நிலையத்தில் யூடியூபர் பெலிக்சிடம் விடிய விடிய விசாரணை appeared first on Dinakaran.