அதிக மழை, பள்ளிகளில் மழைநீர் தேங்குதல், வகுப்பு நடத்த முடியாத சூழல் இருந்தால் பள்ளி தலைமை ஆசிரியர்களே விடுமுறை அறிவிக்கலாம் என்றும் விடுமுறை தொடர்பான தகவல்களை பள்ளிக்கல்வி அலுவலரிடம் தொலைபேசியில் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை, தூத்துக்குடியில் 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
The post திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை!! appeared first on Dinakaran.