அவரை எதிர்த்து நின்ற முன்னாள் வீராங்கனை அனிதா ஷியோரன் 7 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். மேலும் 4துணைத் தலைவர்கள், 5 செயற்குழு உறுப்பினர்கள், பொருளாளர் என 15 பதவிகளில் பெரும்பான்மையான பதவிகளை பிரிஜ்பூஷண் ஆதரவாளர்களே கைப்பற்றி உள்ளனர். பொதுச் செயலாளர் பதவியை மட்டும் அனிதா அணியில் போட்டியிட்ட பிரேம்சந்த் லோச்சப் கைப்பற்றினார். இந்த தேர்தல் முடிவுகள் வீரர்கள், வீராங்கனைகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கூடவே நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உலக மல்யுத்த கூட்டமைப்பு விலக்கிக் கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
The post மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல்; பிரிஜ்பூஷண் ஆதரவாளர்கள் வெற்றி appeared first on Dinakaran.