சென்னை கண்காட்சிக்காக ஊட்டியில் மலர் தொட்டி தயார் செய்யும் பணி தீவிரம்

ஊட்டி: சென்னையில் நடக்கும் மலர் கண்காட்சிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் தொட்டிகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. சென்னையில் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடத்தப்படும் மலர் கண்காட்சியை போன்று சென்னையிலும் பல்வேறு வகையான மலர் தொட்டிகளை கொண்டு மலர் அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. இதற்காக ஆண்டுதோறும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் இருந்து பல்வேறு மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு தொட்டிகள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு அலங்கரித்து வைக்கப்படுகின்றன.

இதற்காக தற்போது நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள மலர் தொட்டிகளை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேரிகோல்ட், பேன்சி, சைக்ளோமன், டெய்சி உள்ளிட்ட பல்வேறு வகையான மலர் தொட்டிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. கண்காட்சிக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் இந்த மலர் தொட்டிகளில் மலர்கள் பூத்தவுடன் மார்ச் மாதம் சென்னைக்கு கொண்டு சென்று அங்கு நடத்தப்படும் மலர்கண்காட்சியில் வைக்கப்பட உள்ளது. இதற்காக தொட்டிகளில் தற்போது மண் நிரப்பும் பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

The post சென்னை கண்காட்சிக்காக ஊட்டியில் மலர் தொட்டி தயார் செய்யும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: