‘‘ தாமரையை பார்த்து புல்லட் பயந்த கதையை சொல்லுங்க, கேட்போம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் கால்பதிக்க தேவையானது மக்களவை சீட் என்ற முடிவுக்கு வந்துள்ளதாம் டெல்லியில் உள்ள தாமரை தலைமை. இது தென் மாநிலங்களில் தாமரை வளர உதவும் என்று நினைக்கிறதாம். கூட்டணி அரசு தான் என்றாலும், தாமரையை விட, புல்லட்சாமி கட்சி அதிக மக்கள் பிரதிநிதிகளை வைத்துள்ளது. மேலும் சுயேட்சை மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவோடு, சட்டமன்றத்தில் அதிக எண்ணிக்கையை காட்டி அதிர வைக்கிறார் புல்லட்சாமி. அதே நேரத்தில் மாநிலத்தில் தாமரை கட்சிக்கு குறைந்த மக்கள் பிரதிநிதிகளே இருக்காங்களாம். அவங்களை புல்லட்சாமி கண்டுகொள்வதில்லை என்றாலும் மத்தியில் தாமரை ஆட்சி இருப்பதால், தங்கள் விரல் அசைவில் புல்லட்டுக்கு ஆட்டம் காட்டி வருகிறார்கள். அந்த விரல் அசைவு மூலம், புதுச்சேரி எம்பி சீட்டை விட்டு கொடுக்க வேண்டும் என தாமரை தரப்பு புல்லட்சாமியிடம் அழுத்தம் திருத்தமாக கேட்டாங்களாம். லோக்கல் ஆட்கள் கேட்டு இருந்தால் மறுத்து இருப்பார். டெல்லியில் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று கொண்டு, புதுச்சேரியில் தாமரை எம்பி தேர்தலில் தாராளமாக போட்டியிடட்டும் என்று ஒப்புக் கொண்டாராம். அதை தனக்கு நெருக்கமானவர்களிடம் நம்ம ஆட்சிக்கு தொல்லை இல்லை.. இப்போதைக்கு நன்றாக போய்க்கொண்டிருக்கு.. மாநில ஆட்சிதான் முக்கியம். ஒரு எம்பியை வைத்து கொண்டு என்ன செய்வது, அவர்களே தேர்தலுக்கு செலவு செய்து ஜெயித்து கொள்ளட்டும் விடு என்று தன்னை சந்தித்து பேசிய கட்சிக்காரர்களிடம் சொன்னாராம். புல்லட்சாமியின் கிரீன் சிக்னலை தொடர்ந்து, தாமரை தரப்பு முன்கூட்டியே வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாம். தற்போதுள்ள உள்துறை அமைச்சரும், புல்லட்சாமியின் மருமகனான சிவமானவரிடம் இதற்கான அசைன்மென்ட் கொடுத்து இருக்காங்களாம்.
இதனை வெற்றிகரமாக செயல்படுத்த ஒரு வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், நீங்களே வேட்பாளராக மாற வேண்டியிருக்கும் என சொன்னாங்களாம். எம்பி சீட்டுக்காக தற்போது புதுச்சேரி தாமரை தலைவர் ஒரு பக்கம் முயற்சிக்கிறாராம். மேலும் துணைத்தலைவர் பொறுப்பில் இருக்கும் சோமபான ஆலை முதலாளி அல்லது புதுச்சேரி தாமரை கட்சியின் நியமன மக்கள் பிரதிநிதி என யாரை எம்பி வேட்பாளராக நிறுத்தலாம் என்று தாமரை தரப்பு யோசிக்கிறதாம். இதில் சிவமானவர் ஓகே சொல்லுபவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்பதால் இனிப்பை மொய்க்கும் ஈக்களை போல அவரையே சுற்றி சுற்றி வருகிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தான் பறித்த குழியில் தானே சிக்கிய தாமரைக்கட்சி நிர்வாகி யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை கிணத்துக்கடவு பகுதியில் அரசுக்கு சொந்தமான கல் குவாரிகள் ஏராளமாக உள்ளன. இங்கிருந்து அரசின் உரிமம் பெற்றே, கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு, கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அதே பகுதியை ேசர்ந்த தாமரைக்கட்சி பிரமுகர் ஒருவர், ஒப்பந்ததாரர்களை மிரட்டி, பணம் பறித்து வருகிறாராம். அதாவது, கனிம வளத்துறை அதிகாரிகள் வகுத்துக்ெகாடுத்த அளவுப்படி அல்லாமல் மீறி கனிமங்களை வெட்டி எடுக்கிறீர்கள். இதுபற்றி மேலிடத்தில் புகார் செய்து, உங்களது ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடுவோம் என மிரட்டி கரன்சி பறித்து வருகிறாராம். ஒரு கட்டத்தில் அந்த ஒப்பந்ததாரர், பணம் ெகாடுக்க மறுத்து விட்டாராம். இதனால், கோபம் அடைந்த அந்த நபர், தானே ஒரு ஆளை தயார்படுத்தி, கனிம வளங்களை லாரியில் கேரளாவுக்கு கடத்தினாராம். வேண்டுமென்றே அந்த நபரை போலீஸ் செக்போஸ்ட்டில் சிக்கவைத்துள்ளார். அந்த நபர், போலீஸ் விசாரணையின்போது, ஒப்பந்ததாரருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தாராம். இதை உண்மை என நம்பிய காக்கி அதிகாரிகள், அந்த ஒப்பந்ததாரரை விசாரணைக்கு அழைச்சாங்களாம். அப்போதுதான், தாமரைக்காட்சிக்காரரின் தில்லுமுல்லு அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்ததாம். இதனால் அதிர்ந்துபோன காக்கி அதிகாரிகள், அந்த தில்லுமுல்லு தாமரைக்கட்சி நிர்வாகியை, தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துட்டாங்க. விரைவில் அவர் ஒன்று… இரண்டு…மூன்று என்று சிறைக்குள் கம்பி எண்ணுவார்னு எதிர்கோஷ்டியினர் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.
The post தாமரைக்கு எம்பி சீட்டை தாரைவார்க்கும் புல்லட்சாமியின் தந்திரம் பற்றி சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.